This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Recent Posts

Saturday, December 15, 2012

அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் ஒன்பதாவதுக் கூட்டம் !






இன்று [ 14-12-2012 ] வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் புதுத்தெரு மஹல்லாவில் உள்ள மிஸ்கீன் சாஹிப் மஸ்ஜிதில் நடைபெற்ற அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் ஒன்பதாவதுக் கூட்டத்திற்கு  AAMF'ன் தலைமை நிர்வாகிகள் M.M.S. சேக் நசுருதீன், பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர் ஆகியோருடன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், முன்னாள் சம்சுல் இஸ்லாம் சங்க செயலாளர் M.B. அபூ பக்கர்,  அதிரை பைத்துல்மால் செயலாளர் அப்துல் ஹமீத், டாக்டர் ஹனீப், முன்னாள் தலைமை ஆசிரியர் S.K.M. ஹாஜா முஹைதீன் மற்றும் புதுத்தெரு மஹல்லாவைச் சேர்ந்த அபூ பக்கர், பஷீர் அஹமது ஆகியோர் பங்களிப்புடன் இனிதே துவங்கியது.



நிகழ்ச்சியின் துளிகள்...

1. கிராஅத் : இமாம் ஹாஜா முஹைதீன் அவர்கள்

2. வரவேற்புரை : ஹாஜி ஜனாப்  M. M.S. சேக் நசுருதீன் அவர்கள்.

3. A. முஹம்மது இப்ராஹீம் ஆலிம் அவர்கள் தனது சிறப்புரையில் AAMF'ன் அவசியம் குறித்து பேசினார்கள்.

4. சென்றமாத AAMF'ன் எட்டாவதுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பற்றிய விவரங்கள் இக்கூட்டத்தில் பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர் அவர்களால் வாசித்துக் காண்பிக்கப்பட்டது.



5. AAMF'ன்  பொருளாளர் K.M. பரக்கத் அலி அவர்களின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, துணை பொருளாளராக  செயல்பட்டுக் கொண்டிருந்த மான் A. நெய்னா முஹம்மது அவர்கள் புதிய பொருளாளராக தொடர்ந்து செயல்படுவார் என அனைவராலும் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.

6. தரகர் தெரு ஜமாத் நிர்வாகத்தினரிடேயே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை களைந்து அவர்களிடேயே சுமூகத்தொடர்பை ஏற்படுத்துவது தொடர்பாக இக்கூட்டத்தில் பேசப்பட்டன. இப்பிரச்சனை R.D.O. விசாரணையில் இருப்பதாகவும், விரைவில் சுமூக தீர்வு எட்டும் என்று இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தரகர் தெரு ஜமாத் நிர்வாகிகளின் ஒரு சாரார் தெரிவித்ததையடுத்து, நல்லதொரு தீர்வு விரைவாக நிறைவேற அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டன.

7. நமதூரில் சமிபத்தில் நடந்த துன்பியல் நிகழ்வு குறித்து கீழத்தெரு மஹல்லா சார்பாக AAMF'க்கு வழங்கப்பட்ட கோரிக்கைக் கடிதம் அனைவரிடத்திலும் வாசித்துக் காண்பிக்கப்பட்டது.

கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் :

பெறுநர் :
தலைமை நிர்வாகிகள்,
அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு [ AAMF ]
அதிராம்பட்டினம்

நமதூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற துன்பியல் நிகழ்வு நம்மையெல்லாம் அதிர்ச்சிக்குள்ளாக்கியதோடு மட்டுமல்லாமல் வேதனை தருவதாகவும் அமைந்துவிட்டது. 

குற்றவாளி காவல்துறையின் பிடியில் இருப்பதால் அவரின் மேல் உள்ள வழக்கு விசாரணையை எவ்வித குறுக்கீடுகள் இன்றி விரைவில் முடிவுக்கு கொண்டுவந்து அவருக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர அதிரை காவல்துறையை அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு சார்பாக கேட்டுக்கொள்ள வேண்டும். இவை பாதிக்கப்பட்டோர் சற்று ஆறுதலடையும் வகையிலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமலும் இருப்பதாக அமையும். 

பாரம்பரிய மிக்க நமதூரில் இதுபோன்ற சம்பவங்கள் இனி தொடராமல் இருப்பதுக்குரிய முயற்சியில் இப்போதே நாம் கவனம் எடுத்துக்கொண்டு அவற்றை தடுப்பதற்குரிய வழிமுறைகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு அதிரை அனைத்து மஹல்லா சார்பாக கட்டுக்கோப்புடன் கூடிய ஒரு ஒழுங்கு முறையை பின்பற்றி அவற்றை அனைத்து மஹல்லாவிலும் செயல்பாட்டுக்கு கொண்டுவருவது அவசிமானதாகும்.

பிள்ளையை இழந்துள்ள அக்குடும்பத்திற்கு பொறுமையையும் மன அமைதியையும் வலிமையையும் கொடுப்பாயாக என்று ஏக இறைவனிடம் பிரார்த்தித்தவர்களாக...

இப்படிக்கு,
தலைமை நிர்வாகிகள்
கீழத்தெரு மஹல்லா – அதிரை

வழக்கு விசாரணையில் இருப்பதால் AAMF'ன் கெளரவ சட்ட ஆலோசகர் சகோ. A.J. அப்துல் ரெஜாக் B.A., B.L அவர்களிடம் மேற்படி நடவடிக்கை குறித்து ஆலோசனைகளைப் பெறுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.




8. AAMF சார்பாக நமதூரைச்சுற்றி இருக்கக்கூடிய கிராமங்களாகிய ஏரிப்புறக்கரை, ராஜாமடம், மகிளங்கோட்டை, தொக்காலிக்காடு, பழஞ்சூர், மளவேனிக்காடு, நடுவிக்காடு, விலாரிக்காடு, உள்ளூர் புதுக்கோட்டை, நரசிங்கபுரம், கரையூர் தெரு, பழஞ்செட்டித்தெரு, காந்தி நகர், முத்தம்மாள் தெரு போன்ற கிராம பஞ்சாயத்தார்களை சந்திப்பது என்றும், நம்மிடையே நல்லிணக்கமான சூழலை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் வருகின்ற ஜனவரி இரண்டாவது வாரத்தின் விடுமுறை தினத்திற்கு பிறகு 'சந்திப்பு' நிகழ்ச்சிக்கு அவர்களை அழைத்து நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றை செயல்படுத்துவதற்காக AAMF'ன் தலைமை நிர்வாகிகள் M.M.S. சேக் நசுருதீன், பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர், மான் A. நெய்னா முஹம்மது, சேக்கனா M.  நிஜாம், P.M.K. தாஜுதீன், M.A. அஹமது ஹாஜா, A. முஹம்மது மொய்தீன்,  இஷாக், E. வாப்பு மரைக்காயர் ஆகியோரைக்கொண்ட குழு ஓன்று நியமனம் செய்யப்பட்டுள்ளன. 

9. இன்று [ 14-12-2012 ]  வாகன விபத்தில் மரணம் அடைந்த சிறுவன் நசீமின் மறுமை வாழ்வை அல்லாஹ் வெற்றியாக்கி வைத்து சுவன பாக்கியத்தை வழங்குவானாக என இக்கூட்டத்தில் துஆ செய்யப்பட்டன.

10. AAMF'ன் ஒன்பதாவது கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட முன்னாள் சம்சுல் இஸ்லாம் சங்க செயலாளர் M.B. அபூ பக்கர்,  டாக்டர் ஹனீப் ஆகியோர் முதல் முறையாக இக்கூட்டத்தில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

11. நிகழ்ச்சிகள் துவாவுடன் இனிதே நிறைவுற்றது.

குறிப்பு : 
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு [ AAMF ] சார்பாக ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின்படி ஒவ்வொரு மாதமும் ஒன்பது முஹல்லாவிலும் தலா ஒரு கூட்டம் எனவும், அதன்படி அடுத்தக் கூட்டமாக "மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கம் மஹல்லாவில்"நடைபெறும் [ இன்ஷா அல்லாஹ் ! ] இதற்கிடையில் அவசரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு கூட்டப்படுகிற கூட்டங்களும் நடைபெறும்.



Saturday, November 17, 2012

அமீரக AAMF–ன் நவம்பா்-2012 மாத செயற்குழு கூட்டம்


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும். [வரஹ்]

 

இடம்: தலைவா் A.தமீம் ROOM

 தேதி: 16-11-2012

 

அமீரக AAMF–ன் நவம்பா்-2012 மாத செயற்குழு கூட்டம் தலைவா் A.தமீம் அவா்கள் தலைமையில் நடைபெற்றது.

அமா்வில் ஆலோசித்து எடுத்த தீா்மானங்கள் :

1)  2013- ஆண்டுக்கான நாள்காட்டி (Calender) அமீரக AAMF சார்பாக கடந்த வருடமும் அச்சிடுவது என முடிவானது. நாள்காட்டி அச்சிடுவதற்கன செலவினங்களை அனைத்து முஹல்லாவும் ஏற்றுக் கொள்வது என தீா்மானிக்கப்பட்டது.

2)  நமதுார் தரகா் தெரு முஹல்லா நிர்வாகத்தில் உள்ளவா்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை களைந்து, தரகா் தெரு முஹல்லா மக்களுல் ஒரு நல்லணக்கத்தை ஏற்படுத்த அதிரை AAMF துரித நடவடிக்கை எடுக்க அமீரக AAMF வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

3)  நமதுாரில் அருகில் உள்ள கிராமங்களின் பஞ்சாயத்தார்களை நமது அதிரை AAMF நிர்வாகிகள் சந்தித்து, நமது AAMF –பை அறிமுகம் செய்து, எதிர்காலத்தில் நமக்குல் நல்லிணக்கமான சூழ்னிலைகளை உருவாக்கிக் கொள்ள ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொள்திறோம்.

 


Friday, October 26, 2012

துபாய் AAMF ஹஜ் பெருநாள் சந்திப்பு (2012) துளிகள் [ காணொளி ] !





துபாய் AAMF நோன்பு பெருநாள் சந்திப்பு (புகைப்படங்கள்)

அஸ்ஸலாமு அலைக்கும், 

அல்லாஹ்வின் பேரருளால் 26-10-2012 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் டேரா-ஈத்கா மைதானத்தில் அதிகாலை முதலே மக்கள் பெருந்திரளாகக் கூடினர்.

காலை 7:10 மணிக்கு பெருநாள் தொழுகை தொடங்கியது. சரியாக 8:10 மணிக்கு பராஹா சாலை வாசலருகே அதிரைவாசிகள் அணிஅணியாகக் கூடத்தொடங்கினர்.




 சந்திப்புக்கு வந்திருந்த பலர் குடும்பத்தினருடனும் குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தது கூடுதல் சிறப்பு.
வீடியோ கேமரா மற்றும் தொழில்நுட்ப புகைப்படக் கலைஞர்கள் குழுவினர் அதிரைவாசிகளை சுற்றிச் சுற்றி படம் பிடித்தது, மைதானத்திற்கு வந்திருந்த பிற ஊர்/நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்தது.
 அதிரைவாசிகள் 350 பேருக்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தது பலருக்கும் மகிழ்ச்சியாக இருந்தைக் காணமுடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.














அதிரைவாசிகளுக்கு இத்தகைய சந்திப்புகளில் இருக்கும் ஆர்வத்தையே காட்டுகிறது.
இந்த இனிய சந்திப்பின்போது வந்திருந்த அதிரைவாசிகளுக்கு "AAMF" சார்பில் இனிப்பு வழங்கப்பட்டது.

Wednesday, October 24, 2012

AAMF-இன் இரண்டாம் ஆண்டு ஹஜ் பெருநாள் சந்திப்பு அழைப்பிதழ்

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

 

அஸ்ஸலாமு அலைக்கும். [வரஹ்]

 

அல்லாஹ்வின் பேரருளால் 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அதிரை அனைத்து மஹல்லா 

கூட்டமைப்புக்கு (AAMF) அடித்தளமாக கடந்த வருட துபாயில் நடந்த நோன்பு பெருநாள் சந்திப்பு அமைந்தது நாம் அனைவரும் அறிந்ததே.

 

இதன்தொடர்ச்சியாக, அதிரை, லண்டன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இவ்வமைப்பு ஏற்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.அல்ஹம்துலில்லாஹ்.

 

உள்ளூரளவிலும் வெளிநாட்டிலும்அதிரைவாசிகளை ஒருங்கிணைக்கும் ஒரே அமைப்பு இல்லாத குறையை நமது  AAMF நிவர்த்தி செய்யும் நோக்கில்பல்வேறு நாடுகளிலுள்ளஅதிரைவாசிகளுடன் சந்திப்புகளை நடத்திஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும்வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும்பெருநாட்களன்று ஒன்றுகூடல்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வருகிறோம்.

 

அவ்வகையில், இன்ஷா அல்லாஹ்,இவ்வருடமும் ஹஜ்  பெருநாளன்று துபாய் - டேரா ஈத்கா(Deira Eid Musallah) மைதானத்தில் அதிரைவாசிகளின் சந்திப்புக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.எனவே, பெருநாள் தொழுகை முடிந்த உடன்சென்றவருடத்தைப் போன்றே ஈத்காமைதானம் வாசலருகே அமீரகத்திலுள்ள நமதூர் சொந்தங்கள் ஒன்றுகூடிமகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதால் நீங்களும் கலந்து கொள்வதோடு ஏனைய அதிரைநண்பர்களுக்கும் தகவல் தெரிவித்து அழைத்து வரும்படி அன்புடன்அழைக்கின்றோம்.

 

குறிப்பு: இத்தகைய சந்திப்புகள் மூலமேவெளிநாட்டிலுள்ளஅதிரைவாசிகளுக்கிடையேபுரிந்துணர்வும் ஒற்றுமையும் பலம்பெறும் என்பதால் சிரமம் பாராதுகலந்துகொண்டு உங்கள் பங்களிப்பைஉறுதிசெய்து ஒத்துழைக்கவேண்டுகிறோம்.

 

மேலதிக விபரங்களுக்கு கீழ்காணும்எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

 

Mr. Ismail  055-6077680                 கடற்கரை தெரு ஜீம்மா பள்ளி மஹல்லா

Mr. Ajmal  050-4963848     தாஜீல் இஸ்லாம் சங்கம் மேலத்தெரு மஹல்லா

Mr. Meeramohindeen 055-2320145   அல் மதரஸத்துன் நுருல் மஹம்மதியா சங்கம் கீழத் தெரு

Mr. Mohideen  050-5785239     மஆதினுல் ஹஸனாத்தில் இஸ்லாமிய சங்கம் நெசவுத் தெரு

Mr. Naina  050-7397093    முகைதீன் ஜீம்மா பள்ளி மஹல்லா தரகர் தெரு

Mr. Bashir 050-9228114                 மிஷ்கீன் சாஹிப் பள்ளி மஹல்லா

Mr. Abdul Jabbar   055-8219432            சம்சுல் இஸ்லாம் சங்கம் மஹல்லா

 

அன்புடன்,

அனைத்து மஹல்லாஹ் கூட்டமைப்பு(AAMF)
ஈத்
 பெருநாள் சந்திப்பு குழு
UAE

Saturday, October 20, 2012

அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் எட்டாவதுக் கூட்டம் !



இன்று ( 19-10-2012 ) வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் M.S.M. நகர் மற்றும் K.S.A. லேன் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஆதம் நகர் மஹல்லாவில் உள்ள ரஹ்மான் மஸ்ஜிதில் நடைபெற்ற அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் எட்டாவதுக் கூட்டத்திற்கு  AAMF'ன் தலைமை நிர்வாகிகள் M.M.S. சேக் நசுருதீன், பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர், K.M. பரக்கத் அலி மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட அக்பர் ஹாஜியார், மூத்த சகோ. இப்ராகிம் அன்சாரி, அதிரை பைத்துல்மால் செயலாளர் சகோ. அப்துல் ஹமீத், நாவலர் நூர் முஹம்மது, வழக்கறிஞர் அப்துல் முனாப் ஆகியோர் பங்களிப்புடன் இனிதே துவங்கியது.




நிகழ்ச்சியின் துளிகள்...

1. கிராஅத் : சேக்தாவுது ஆலிம் அவர்கள்

2. வரவேற்புரை : ஹாஜி ஜனாப்  M. M.S. சேக் நசுருதீன் அவர்கள்.

3. முஹம்மது யூசுப் ஆலிம் அவர்கள் தனது சிறப்புரையில் 'கூட்டத்தின் ஒழுங்கீனம்பற்றி' குறிப்பிட்டு பேசினார்கள்.

4. சகோ. வாப்பு மரைக்காயர் அவர்கள் தனது அறிமுக உரையில் 'M.S.M. நகர் மற்றும் K.S.A. லேன் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஆதம் நகர் உருவாகிய வரலாறு பற்றி குறிப்பிட்டு பேசினார்கள்.

5. நமதூரில் நிகழக்கூடிய இறப்புகளுக்காக [ மவுத் ] குழி வெட்டுதலில் ஈடுபடும் சகோதரர்களுக்கு காலதாமதமில்லாமல் அவர்களுடைய ஊதியம் அவர்களுக்கு சென்றடையும் வகையில் கையிருப்பு தொகை இருப்பதின் அவசியம் எடுத்துப்பேசப்பட்டன. இதற்குரிய உதவிகளுக்கு  முயற்சிக்கும்படி அனைத்து மஹல்லா நிர்வாகிகளிடமும் தனது வேண்டுகோளாக வைத்தார் பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள். 

6. முதன் முதலாக AAMF'ன் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆதம் நகர் மஹல்லாவாசியான மூத்த சகோ. இப்ராகிம் அன்சாரி அவர்களை வரவேற்று அனைவரிடத்திலும் அறிமுகம் செய்துவைத்து அவர்களின் சமூகம் சார்ந்த எழுத்துப்பணிகள் பற்றி குறிப்பிட்டு பேசினார் பேராசிரியர்  M.A. முஹம்மது அப்துல் காதர் அவர்கள்.

7. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, கல்விக்கடன் போன்றவற்றை பெறுவதற்கான வழிமுறைகளை வழங்குவதற்காக குழு ஓன்று ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் AAMF'ன் தலைமை நிர்வாகிகள் M.M.S. சேக் நசுருதீன், பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர், சேக்கனா M.  நிஜாம் மற்றும் மான் A. நெய்னா முஹம்மது ஆகியோரை நியமணம் செய்யப்பட்டுள்ளன.

8. AAMF'ன் பைலா அடுத்தக் கூட்டத்தில் இறுதிவடிவம் செய்யப்பட வேண்டும் என்று அனைவரிடமும் கேட்டுக்கொள்ளப்பட்டன.

9. அனைத்து முஹல்லாவின் ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு திருமண பதிவேடு புத்தகத்தை அந்ததந்த மஹல்லாவிற்குள் மட்டும் பயன்படுத்திக்கொள்ள அனைவரிடமும் கேட்டுக்கொள்ளப்பட்டன.

10. முஹல்லா என்ற வார்த்தையை நீக்கிவிட்டு 'மஹல்லா' என்ற சரியான வார்த்தையை அனைத்து தகவல் தொடர்புகளிலும் பயன்படுத்தக் கேட்டுக்கொள்ளப்பட்டன.


11. இதய சிகிச்சைக்காக சகோ. சாகுல் ஹமீத் அவர்களுக்கு சகோ. இம்தியாஸ் மூலம் பெறப்பட்ட ரூபாய் 17,300/- AAMF'ன் நிர்வாகிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டு, அவர் விரைவில் பூரண குணமடைந்து பணிக்கு திரும்ப இறைவனிடம் 'துஆ'ச்செய்ய அனைவரிடத்திலும் கேட்டுக்கொள்ளப்பட்டன.

12. அரசின் சார்பாக ஆதார் அடையாள அட்டை வழங்குவதற்காக நம்மைப்பற்றிய உடற்கூறு ரீதி ஆதாரங்கள் [ புகைப்படம், அங்க அடையாளங்கள் போன்றவை ] எடுக்கும் பணிகள் நமதூரில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதற்குரிய ஆவணங்களை அலுவலரிடம் சமர்பித்து தவறாது எடுத்துக்கொள்ளும்படி அனைவரிடமும் வேண்டுகோள் விடப்பட்டன.

13. AAMF'ன் எட்டாவது கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட சகோதரர்கள் இப்ராகிம் அன்சாரி, அதிரை பைத்துல்மால் செயலாளர் அப்துல் ஹமீத், நாவலர் நூர் முஹம்மது ஆகியோர் முதல் முறையாக பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

14. நிகழ்ச்சிகள் துவாவுடன் இனிதே நிறைவுற்றது.






குறிப்பு : 
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு [ AAMF ] சார்பாக ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின்படி ஒவ்வொரு மாதமும் ஒன்பது முஹல்லாவிலும் தலா ஒரு கூட்டம் எனவும், அதன்படி அடுத்தக் கூட்டமாக "புதுத்தெரு மஹல்லாவில்" நடைபெறும் [ இன்ஷா அல்லாஹ் ! ] இதற்கிடையில் அவசரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு கூட்டப்படுகிற கூட்டங்களும் நடைபெறும்.



Monday, October 15, 2012

AGT Inverter & Battery



100 AMP with 2 years Exchange Grantee & 1 Year Normal Warranty.
125 AMP with 2 years Exchange Grantee & 1 Year Normal Warranty.
150 AMP with 2 years Exchange Grantee & 2 Year Normal Warranty.
More Details Please call Me : Abdul Wahab
Mobile No : +91-9500822092

Afiya General Trading
Adirampattinam - 614701
Pattukottai - TK
Thanjavur -District
Tamil Nadu
Sister Concern Company's: AGT Food Products, AAA Construction, AAA Electrician & plumping,  AAA Business and Marketing,  AAA Dairy Farm, Inverter, Solar Home Packages, Web Developing, Email Marketing & UAE Visa Services


Friday, October 12, 2012

அமீரக AAMF-ன் அக்டோபர் மாத செயற்குழு கூட்டம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும். [வரஹ்]

இடம்: தாஹா நெசவு தெரு முஹல்லா, சார்ஜா
 தேதி: 11-10-2012

அமீரக AAMF-யின் அக்டோபர் மாத செயற்குழு கூட்டம் தலைவர்  A. தமீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இவ்வமர்வில் ஆலோசித்து எடுக்கப்பட்ட தீர்மானங்கள்...

1. AAMF - யின் 2013 ஆண்டு காலண்டர் வினியோகிப்பது சம்மந்தமாக ஸ்பான்ஸ்சர்களை அணுகி காலண்டர்காண பொருளாதாரத்தை ஈட்டுவது, அது முடியாத பட்சத்தில் அனைத்து முஹல்லாக்களின் பங்களிப்புடன் தொகையை வசூழித்து அச்சிட்டு வினியோகிப்பது.
2. தரகர் தெரு முஹல்லா ஜாமாத்தை ஒருகிணைப்பது.
3. அதிரையில் AAMF சட்டப்புர்வமாக பதிவு (REGISTER) செய்வதை துரிதப்படுத்துவது.

இப்படிக்கு,
AAMF-UAE

1977 மலரும் நினைவுகள் - பகுதி - 3




1977 மலரும் நினைவுகள் - பகுதி - 3
*******************************************

அதிரையில் அடுத்த வீட்டுப் பழக்கம் போல் சாதாரண சக மனிதர்கள் சில நேரங்களில் மனதில் அச்சாக பதிந்து விடுவார்கள். அன்றைய காலத்தில் அதிரையின் ஆர்ப்பரிக்கும் 'நடுத்தெரு' வாசிகளுக்கு இன்றைக்கும் ஞாபகம் இருக்கும் அதில் சில நினைவலைகளை அசைத்து விடுகிறேன்.



அறியப்பட்டவர்களில் – "அம்மாக் கள்ளன்"

இரவில் மட்டுமே வீடுவீடாக சென்று யாசகம் கேட்பார், வீட்டு வாசல் முன் வந்து "அம்மா" என்று அபரிவிதமான சப்தமிட்டு அழைப்பார். அந்த பழகிய சத்தம் கேட்டது வீட்டுக்காரர்களுக்கும் விளங்கிவிடும் அம்மாக்கள்ளன் வந்திருக்கிறார் என்றும். காசோ அல்லது இரவுச் சாப்பாடோ அவருக்கு கொடுக்கப்படும். இரவில் சோறு கொடுத்தால் "பசியாற (அப்பம், இடியாப்பம்) இருந்தா கொடுமா" என்று அடுத்து கேட்பார்.

அதெல்லாம் இல்லை என்று சொன்னால் "உன் மாப்பிள்ளைக்கு மட்டும் கொடுக்கிரியே" என்று அலங்காய்ப்பார்.

சோறு கொடுத்து 'ஆணம்' கொடுக்காவிட்டல் "ஆணம் கொடு" என்று அதட்டலாக கேட்பார்.

'அப்படியொன்னும் இல்லை' என்று சொன்னால்.

அடுத்து "கொக்கு ஆணம் மணக்குது சொட்டுக்கோனு கொடுத்தால் கொரஞ்சா போகும்" என்பார்.

இது அவரின் வழக்கமான தொடர் உரையாடகளில் ஒரு சில.

இவற்றையெல்லாம் விட எதுவுமே கொடுக்காத வீட்டில் வாசலில் உள்ள பல்பை கழட்டிக் கொண்டு போய்விடுவார்.

நல்ல உயரமாக இருப்பார், தலையில் தலைப்பாகை அணிந்திருப்பார், அன்றைய காலங்களில் எங்களைப்போல் சிறுவர்கள் வீடுகளில் அடம்பிடித்தால் "அம்மாகள்ளனிடம் பிடித்து கொடுத்துடுவேன்" என்று எங்கள் அன்றையச் சூழல் உம்மாக்கள் பயமுறுத்துவர்கள்.

அறியப்பட்டவர்களில் அடுத்து - "காக்கரு"

இவர் ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவர் வடநாட்டை சேர்ந்தவர் ஏறக்குறைய நாற்பது வயது இருந்திருக்கலாம். அவரிடம் சென்று பெயர் கேட்டால் "காக்கரு" என்பார். வேறு ஏதேனும் கேட்டாலும் "காக்கரு" என்பார். அதுவே அவரை 'காக்கரு' என்று நாங்களே பெயர் வைத்து அழைத்து வந்தோம்.

கிழிந்த பாவாடை கிழிந்த சட்டை கையில் ஒரு டப்பா இதுதான் அவரின் தோற்றம். உண்மையில் அவரிடம் சிறுவர்களாகிய நாங்கள் அவரின் பெயரை கேட்கும்பொழுது எங்கள் பாசை அவருக்கு புரிந்திருக்காது. அவர் சொலவதும் எங்களுக்கு புரியாமல்தான் அவரின் பெயர் 'காக்கரு' ஆனது.

பின்னர்தான் எங்களுக்கு (ஹிந்தியில் தார் பூசாமல் அமைதியான பின்னர்) அவர் சொன்னது என்னவென்று தெரிய வந்தது. " கியா கரோ?" (என்ன செய்ய?), 'இந்த ஊரில் வந்து மாட்டிக் கொண்டேனே என்ன செய்ய?' என்று அவர் கேட்டதைத்தான் நாங்கள் புரிந்த விதத்தில் தவறாய் "காக்கரு பைத்தியம்" என்று வழக்கானது.

அந்த நாட்களில் சிங்கப்பூர், மலேசியா, கொழும்பு, சபுராளிங்கதான் அதிகம், துபாய் சவுதி வந்த பின்னர்தான் ஹிந்தி என்னும் மொழி இரயிலடியில் தார் பூசப்பட்டு இருந்தது நமக்கெல்லாம் தெரிந்தது. 


அறியப்பட்டவர்களில் மற்றொருவர் – "உசேன் பாய்"

இவர் நல்ல கடின உழைப்பாளி தெருவில் இருக்கும்  அனைத்து வீட்டு கல்யாணங்களிலும் இவரைப் பார்க்கலாம். பள்ளிவாசலில் இருந்து வாடகைச் சட்டி பாத்திரம் கொண்டு வந்து கல்யாண வீட்டில் சேர்ப்பதும் விருந்து முடிந்ததும் அனைத்து பாத்திரங்களை கழுவி சுத்தம் செய்வதும் அங்கிருக்கும் சமையல்காரகளுக்கு பாகுபாடின்றி உதவுவது என்று மிகக்கடுமையாக உழைப்பார்.

ஒரு நாள் இவரைப் போட்டு சிலர் கூடி அடித்து கொண்டு இருந்தார்கள், என்னவென்று விசாரித்தால் இவர் உண்மையிலேயே ஊர் மக்கள் எதிர்பார்த்த்து போன்று பெயருக்கேற்ற மார்க்கத்தில் இல்லாதவர் என்று. ஆதலால் அவரை அங்கிருந்து அனுப்பிவைத்து விட்டார்கள்.

ஒழுக்க நெறிபோற்றும் தெள்ளத்தெளிவான மார்க்கத்திலே பிறந்து எத்தனையோ சகோதரர்கள் பிறமத பெயர்களை அழைக்கும் பெயர்களாக்கிக் கொண்டு மேலை நாட்டு மோகம் கொண்டு உலகவாழ்க்கையை சுவைக்க துடிக்கிறார்கள் ஏன் இன்னும் அதனை சுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ் பாதுகப்பானாக!

ஏறக்குறைய ஏழு வருடங்கள் "உசேன் பாயாக" (அதிரையில் கடின  உழைப்பில்) தனது பிழைப்புக்காக பெயரை மாற்றிக் கொண்டவரிடம் "ஷஹாதத் கலிமா" சொல்லிக் கொடுக்காமல் ஊரைவிட்டே வெளியேற்றினோம் இன்று அவர் எப்படி இருக்கிறாரோ !? அல்லாஹ் அறிவான்.

மறக்க முடியுமா செக்கடி பள்ளி ஜாம்பவான்களையும் !? அவர்களை கண்டால் சிறுவர்களாக இருந்த எங்களுக்கெல்லாம் பயம் கலந்த மரியாதை (இன்றைய இளய வயதுடையோரின் ஆவேசம் சில நேரங்களில் அவர்களின் கண்களை மறைக்கிறது பெரியவர்களுக்கு கொடுக்கும் மரியாதை அங்கே இருட்டாகாவே இருந்து விடுகிறது.

எது எப்படியிருந்தாலும் எங்களால் பெரிதும் மதிக்கப்பட்ட மதிப்பிற்குரிய மனிதர்கள்.

  1 பார்லாக்கா
  2 மோமியாக்கா
  3 காலாவை – அபூபக்கர் காக்கா
  4 சென்டியராக்கா
  5 அப்பாஸ் ஹாஜியார்
  6 ஒய்சாக்கா

எல்லாம் வல்ல அல்லாஹ் இவர்களின் மண்ணறையை பிரகாசமாக்கி அவர்களுக்கு நற்பதவியை கொடுப்பானாக.

மீண்டும் சந்திப்போம்

மு.செ.மு.சபீர் அஹமது


Note! thanks adirai nirubar